தூசி தட்டப்படும் வழக்கு.. ராஜேந்திர பாலாஜிக்கு தலைவலி ஆரம்பம்

Update: 2024-08-23 11:37 GMT

ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ஆவின் நிறுவன மேலாளர் பணியை வாங்கி தருவதாக கூறிய அதிமுக பிரமுகர் விஜயநல்லதம்பி என்பவரிடம் 2020இல் 30 லட்சம் ரூபாய் அளித்ததாக கூறியிருந்தார். வேலை வாங்கி தராததால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். விஜயநல்லதம்பி பல்வேறு நபர்களிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை பெற்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கியதாக புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டது என கூறியிருந்தார். 2021 நவம்பரில் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்