``இதெல்லாம் சும்மா டிரைலர் தான்''... நேருக்கு நேர் அட்டாக்... புல் ஃபோர்ஸில் தாண்டவம் ஆடிய மோடி

Update: 2024-07-03 13:25 GMT

மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு எடுத்துச் செல்ல உழைத்து வருவதாக குறிப்பிட்டார். ஆட்டோ பைலட் மோட் என்ற அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வதையே காங்கிரஸ் கட்சி தனது பழக்கமாக கொண்டிருந்தது என விமர்சித்த பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்தது எல்லாம் வெறும் பசியை தூண்டுகின்ற செயல்தான், பிரதான உணவு இனிதான் வர இருக்கிறது எனக் குறிப்பிட்டார். அடுத்து வரும் 5 ஆண்டுகள் முழுமையாக ஏழ்மைக்கு எதிரானதாக எங்களது போராட்டம் இருக்கும் என்றவர், நமது விவசாயிகளை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்