"நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை".. ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-07-24 16:30 GMT

விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க இருந்தனர். தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக பேசலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரை நாடாளுமன்றத்தில் சந்திப்பதற்கு அழைத்து இருந்ததாகவும், ஆனால் அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அவர்கள் விவசாயிகள் என்பதற்காக அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிட்ட ராகுல் காந்தி, இன்றைய காலகட்டங்களில் இந்தியாவின் விவசாயிகள் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை, என்ன செய்வது இதுதான் பிரச்சினை என்றால் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை வெளியில் சந்திப்பேன் என்றார். அதனைத் தொடர்ந்து விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளை நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்