ஒரே நேரத்தில் கலெக்டரை தேடி வந்த 33 கவுன்சிலர்கள் - பரபரப்பில் காஞ்சிபுரம்

Update: 2024-07-06 06:31 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் 33 கவுன்சிலர்கள் மனு அளித்தனர். ஏற்கனவே மேயரை மாற்ற வேண்டும் என, போர்க்கொடி தூக்கிய திமுக, அதிமுக, பாமக, பாஜக, சுயேட்சை கவுன்சிலர்கள் வலியுறுத்தியிருந்தனர். இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ள கவுன்சிலர்கள், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் செயல்படுவதாக குற்றம் சாட்டி, அவரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்