நாயுடுவுக்கு ஓபனாக ஆபர் கொடுத்த காங்கிரஸ்.. இந்தியா கூட்டணி ஆட்சியா? மோடிக்கு தொடரும் சிக்கல்

Update: 2024-06-05 03:32 GMT

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை இழுக்க இந்தியா கூட்டணி முயற்சியை துவங்கி உள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தயார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுபோல, பீகாரில் 14 தொகுதிகளை வென்றுள்ள நிதிஷ்குமாருக்கு மீண்டும் இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்பதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகலில் டெல்லி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்