"ஒவ்வொரு விநாடியும் மிக முக்கியம்" - நாளை விடிந்த உடன் அலர்ட் ஆகும் அதிமுக

Update: 2024-06-03 06:21 GMT

மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணி முகவர்கள் அனைவரும் கால தாமதம் இன்றி வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும்

கடைசி வரை அனைவரும் இருந்து

மொத்தமாகதான் வெளியே வர வேண்டும்

என்றும் அவர் கேட்டு கொண்டார்.

வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்றும் , வாக்கு பதிவு இயந்திரம் உங்கள் தொகுதிக்கானது தானா என உறுதி செய்ய வேண்டும் என்றும் செல்லூர் ராஜூ கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்