காங்கிரஸ் கட்சி கூட்டம்.. 5 மாநில தோல்வி குறித்து ஆலோசனை..!

மே 13 முதல் 15ஆம் தேதி வரை, காங்கிரஸ் கட்சியின், பிரமாண்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-04-26 02:00 GMT
மே 13 முதல் 15ஆம் தேதி வரை, காங்கிரஸ் கட்சியின், பிரமாண்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், "சிந்தன் சிவிர்" என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி ஒரு பிரமாண்ட கூட்டத்தை நடத்த உள்ளதாக, கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 400 பேர் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், 5 மாநில தேர்தல் தோல்வி குறித்தும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்சினை, அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், கட்சியை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்