"ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் உள்ளது" கமல்ஹாசன் பேச்சு

ஆண்டிற்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-24 13:29 GMT
ஆண்டிற்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு காணொலி காட்சி மூலம் தொண்டர்களிடையே உரை உரையாற்றிய அவர், கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசிய அவர், தமிழகத்தில் ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் இருப்பதாக குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்