அமைச்சராக பதவியேற்ற பின் ஏழுமலையான் கோயிலில் ரோஜா தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-04-19 09:17 GMT
அமைச்சராக பதவியேற்ற பின் ஏழுமலையான் கோயிலில் ரோஜா தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயகம் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் திறம்பட செயல்பட்டு ஜெகன்மோகன் ஆட்சிக்கும், கட்சிக்கும் நற்பெயர் எடுத்துத் தர உள்ளதாகத் தெரிவித்த அவர், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தது பெரு மகிழ்ச்சி அளிப்பதாக பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்