டெல்லியில் வரும் 30ம் தேதி முதலமைச்சர்கள் மாநாடு

டெல்லியில், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு, வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2022-04-15 19:43 GMT
டெல்லியில், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு, வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. 


பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில், மத்திய அரசுடன் மாநில அரசின் உறவுகள்,  திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, உள்மாநில திட்டங்கள், மத்திய அரசின் நிதியுடன் கட்டமைக்கப்படும் மாநில திட்டங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், மாநில அரசுகள் தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மாநாட்டின் நிறைவுநாளில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் விருந்து அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்