மாநிலங்களவையில் கண்ணீர் விட்டு அழுத பா.ஜ.க. எம்.பி.

திரிணமூல் காங்கிரஸ் அமளி காரணமாக மாநிலங்களவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-03-25 12:20 GMT
திரிணமூல் காங்கிரஸ் அமளி காரணமாக மாநிலங்களவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் நடந்த கலவரம் குறித்து பேசிய பா.ஜ.க. உறுப்பினர் ரூபா கங்குலி, திரிணாமூல் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு நாளும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்டு அவர் கண்ணீர் விட்டார். ரூபா கங்குலியின் குற்றச்சாட்டுக்கு திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்