ஒரே நேரத்தில் மாயமான 21 ஐ-போன்கள் - சிரித்து கொண்டாடிய மறுநொடியே இறங்கிய இடி

Update: 2024-10-21 07:37 GMT

ஒரே நேரத்தில் மாயமான 21 ஐ-போன்கள் - சிரித்து கொண்டாடிய மறுநொடியே இறங்கிய இடி

இசை நிகழ்ச்சியில் செல்போன்களை திருடிய வடமாநில திருடர்களை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் அக்டோபர் 6 ஆம் தேதி ஆலன் வாக்கரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், 39 பேரின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் 21 ஐ-போன்களும் அடங்கியிருந்தன. இதில் சில போன்களின் ஐஎம்ஐ எண்களை சோதித்தபோது, அவை டெல்லியில் இருப்பது தெரியவந்தது. டெல்லி விரைந்த முழவங்காடு போலீசார், தரியாகஞ்ச் பகுதியில் அதிபுர் ரஹ்மான் மற்றும் வாசிம் அகமது ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மற்றும் மும்பையில் இருந்து இருவேறு கும்பல், கேரளாவில் தனித்தனியாக விடுதி எடுத்து, இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டதும், பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்