``ஆத்மி கட்சி இல்லாமல்..'' ஹிசார் மண்ணில் நின்று உரக்க சொன்ன கெஜ்ரிவால்...

Update: 2024-09-25 17:02 GMT

தான் முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், ஆம் ஆத்மி கட்சி இங்கு ஆட்சி அமைத்திருக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானாவில் கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தான் வீடு திரும்பியது போல் உணர்கிறேன் என்றும், தனது குழந்தைப் பருவத்தை இங்கு கழித்தாக கூறினார். தன் வாழ்க்கையில்

நேர்மையை மட்டுமே சம்பாதித்ததாகவும், தனது மற்றும் தனது கட்சியின் வங்கிக் கணக்குகள் காலியாக உள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் அரசு பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்ற மணீஷ் சிசோடியா இரவு பகலாக உழைத்தவர், ஆனால் மோடியும், பாஜகவும்

அவரை சிறையில் அடைத்ததால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது என்றார்.ஹரியானாவில் ஆம் ஆத்மியின் வலுவான சூழல் நிலவுகிறது

என்றும் தான் முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், ஆம் ஆத்மி கட்சி இங்கு ஆட்சி அமைத்திருக்கும் என்றார். இங்கு எந்த ஆட்சி அமைந்தாலும் ஆம் ஆத்மி கட்சி இல்லாமல் அது

அமையாது என கெஜ்ரிவால் பேசி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்