நாடே எதிர்பார்க்கும் 5 மாநில தேர்தல்.. பாஜகவுக்கு எதிராக இறுதி நொடியில் டிரம்ப் கார்டை இறக்கிய காங்.

Update: 2023-11-06 06:38 GMT

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை முதற்கட்டமாகவும், 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 20 தொகுதிகளுக்கு நாளை செவ்வாய்கிழமை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது. அங்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை பிரகடனம் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை, நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் வெளியிட்ட‌து. இதே போன்று, 40 தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலமான மிசோரம் சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மிசோரத்திற்கு நேரடியாக செல்லாமல் காணொலி மட்டும் வெளியிட்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்திருந்தார். வாக்குப்பதிவை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக சிஆர்பிஎப் வீர‌ர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்