டெல்லியில் சட்டென எகிறிய கொரோனா... பிப்.15-க்கு பின் - அதிர்ச்சி கொடுக்கும் டேட்டா

டெல்லி நகரில் புதியதாக ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2022-04-23 02:50 GMT
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக தலைநகரான டெல்லியில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், இது கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்