காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி..தீவிரவாதிகள் நடமாட்டத்தால் எல்லையில் பதற்றம்

கடந்த இரு நாட்களாக காஷ்மீர் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-22 07:13 GMT
கடந்த இரு நாட்களாக காஷ்மீர் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரமுல்லா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அதிகாலையில் ஜம்முவில் உள்ள சத்தா முகாமிற்கு சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சம்பா மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ள நிலையில், தீவிரவாதிகள் நடமாட்டம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்