"தொழிலதிபரை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு - மூன்று பேர் கைது"

புதுச்சேரியில் தொழிலதிபரை மசாஜ் சென்டருக்கு வரவழைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-15 18:48 GMT
புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத். தொழிலதிபரான இவருக்கும், லாஸ்பேட்டையில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ராஜேஷ் தனது நண்பர் கார்த்திகேயனுடன் சேர்ந்து மஞ்சுநாத்தை பியூட்டி பார்லருக்கு வரவழைத்து, அடித்து உதைத்து, செல்போன், பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகிவற்றை பறித்துக் கொண்டதோடு, இருவரின் வங்கி கணக்கிற்கும், தலா இரண்டரை லட்ச ரூபாய் வீதம் 5 லட்ச ரூபாயை செல்போன் மூலமாக பணபரிமாற்றம் செய்ய வைத்து மஞ்சுநாத்தை விரட்டியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேஷ் - பிரேமா தம்பதியினர், மஞ்சுநாத்தை பெண்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி மசாஜ் சென்டருக்கு வரவழைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான 3  பேரையும் சேலத்தில் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்