"பம்பைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை" - கடகம்பள்ளி, கேரள அமைச்சர்

சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-07 05:34 GMT
சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நிலக்கல்லிலிருந்து  பம்பைக்கு அரசு பேருந்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 17ம் தேதி தொடங்க உள்ள மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகள்  முடிவடையும் நிலையில் உள்ளதாவும் அவர் தெரிவித்தார். பம்பை, நிலக்கல் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதனால், பம்பைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை எனவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்