திடீர் வைரலான பேன்டின் ஷாம்பூ.. "பைத்தியம்" - வம்பிழுத்த சுசித்ராவை சீண்டிய வைரமுத்து..?

Update: 2024-09-20 08:24 GMT

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்ட யாரையோ விமர்சிக்கும் வகையில் பரபரப்புக் கருத்தொன்றை பதிவு செய்துள்ளார்... தோல்விகள், நிறைவேறாத ஆசைகளால் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர், ஒரு தலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர் என்றும்,

தம்மைக் கடவுள் என கருதிக் கொள்ளும் அரிய மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், அவர்களை அனுதாபத்தால் குணப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு என்று பரிந்துரைத்துள்ள வைரமுத்து உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சமீப காலமாக பாடகி சுசித்ரா, வைரமுத்து குறித்து சர்ச்சைக் கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், வைரமுத்து இப்படியொரு பதிவைப் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்