மாரி செல்வராஜை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்கள் | Mari Selvaraj | Vaazhai

Update: 2024-08-23 11:32 GMT

வாழை திரைப்படம் வெளியானதை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ், நெல்லையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார். பட்டாசுக்கள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள், மாரி செல்வராஜை தோளில் தூக்கி ஆளுயர மாலையை அணிவித்து கொண்டாடினர். பின்னர் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து மாரி செல்வராஜ் கண்டு மகிழ்ந்தார். முன்னதாக திரையரங்கில் படம் பார்க்க வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்