நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கிய இடத்தில் செயல்படாத சிசிடிவி கேமரா

Update: 2024-09-14 15:36 GMT

அமையாகரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருபுறமும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன...ஆனால் சில மாதங்களாகவே அவை செயல்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் திருட்டு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் 3 தினங்கள் முன்பு கூட இதே இடத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மேலாளர் ஆகியோர் கார் விபத்தில் சிக்கினர். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் நடிகர் ஜீவா..இந்த நிலையில் சிசிடிவி கேமரா செயல்பட்டிருந்தால் அந்த விபத்து பதிவாகி இருக்கும் என்றும், யார் மேல் தவறு என்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பஞ்சாயத்து நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... திருட்டு சம்பவத்தைத் தடுக்கவும், விபத்துகள் குறித்து கண்காணிக்கவும் சிசிடிவி கேமராவை பழுது நீக்கி பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்