பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்..

Update: 2024-09-18 05:09 GMT

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகையான ஏ.சகுந்தலா தனது 84வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சகுந்தலா. சி.ஐ.டி. சங்கர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவருக்கு சி.ஐ.டி சகுந்தலா என்ற சிறப்பு பெயரும் உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களுடன் நடித்த இவர் சமீபத்தில் சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இந்நிலையில் பெங்களூருவில் தனது மகளுடன் தங்கியிருந்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்