மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இளைஞர் - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காட்சி

x

ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த ஐந்தாம் தேதி மலேசியாவிற்கு வேலைக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் தட்பவெட்ப நிலை தனக்கு ஒத்துவராததால் தன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உடலில் கொப்பளங்கள் ஏற்படுவதாகவும், மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏஜென்ட் மூலமாக வேலைக்குச் சென்றதால் தன்னால் மலேசியாவில் இருந்து வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தன்னை தமிழகத்திற்கு மீட்டு வரக்கோரி முதலமைச்சர், தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோரும் தங்களது மகனை மீட்டுத் தரக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்