உலகையே பீதியாக்கிய போர்.. தோள் கொடுத்த இத்தாலி | Ukraine | Russia| Thanthitv

x

அமைதி பேச்சுவார்த்தை சரணடைவதாக அர்த்தமாகாது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு இத்தாலி அறிவுறுத்தியுள்ளது... இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அங்கு அந்நாட்டு அதிபர் Giorgia Meloniயை சந்தித்து உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்... ரஷ்யாவைத் தாக்க உக்ரைன் தன் நட்பு நாடுகளால் வழங்கப்பட்ட நீண்ட தூர வான்-ஏவுகணைகளைப் பயன்படுத்த இத்தாலி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் Meloniயை சந்தித்துள்ளார் ஜெலென்ஸ்கி... எவ்வாறாயினும், தேவைப்படும் வரை உக்ரைனுக்கு உதவ இத்தாலி உறுதியாக இருப்பதாக தெரிவித்த Meloni, அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்துவதென்பது சரணடைவது ஆகாது என ஜெலென்ஸ்கிக்கு அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்