பேரழிவின் உச்சம் தொடும் போர் பூமி..கொத்து கொத்தாக சிதறும் உடல்கள் -இதுவரை காணாத அதிர்ச்சி ரிப்போர்ட்

x

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. கடந்த மாதம் 7ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 4 ஆயிரத்து 104 சிறுவர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதே போன்று, 2 ஆயிரத்து 641 பெண்கள் என இதுவரை 10 ஆயிரத்து 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்ட‌ட இடிபாடுகளில் இருந்து ஏராளமானோரை மீட்கப்படாமல் இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்