இஸ்ரேலுக்கு பயம் காட்டும் புதிய எதிரி.. ஹமாஸ், ஹிஸ்புல்லாவை விட பயங்கரமானவர்கள்

x

இஸ்ரேலுக்கு பயம் காட்டும் புதிய எதிரி.. ஹமாஸ், ஹிஸ்புல்லாவை விட பயங்கரமானவர்கள் - செங்கடலில் பெரும் பதற்றம்

இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக படையெடுக்க தயாராக இருப்பதாக ஏம‌னின் ஹௌதி அமைப்பு அறிவித்துள்ளது. பாலஸ்தீனியத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகனைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக, ஹவுதி அமைப்பின் யாஹ்யா சரியா தெரிவித்துள்ளார். செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய போர்க்க‌ப்பல்களின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க தயங்க மாட்டோம் என்றும் கூறினார். காசாவில், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தும் வரை, தங்களது தாக்குதல் தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்