இம்ரான் கான் கைது எதிரொலி..கட்சியினர் எடுத்த திடீர் முடிவு

x

பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பரிசு பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹரீக் எ இன்சாஃப் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அமைதி வழியில் போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்