இலங்கை அதிபர் ரேஸில் தமிழர்.. உலக தமிழர்களை திரும்பி பார்க்கவைத்த முடிவு

x

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பில் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் இதில் கையெழுத்திட்டனர். இந்த கூட்டணி அமைப்பானது "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய இன மக்களை ஒன்றுபடுத்துவது என்னும் முக்கிய நோக்கத்தோடு, அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பரப்புரை மேற்கொள்வது என்பன உள்பட 9 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்