இலங்கையில் ஒன்று கூடும் 12 நாடுகள்.. இந்தியா, பாகிஸ்தான்..

x

இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் 39 பேர் போட்டி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுயேட்சையாக களமிறங்கிய முகமது இலியாஸ் என்பவர் உயிரிழந்துவிட்டார். தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டுகிறார்கள். இப்போது அங்கு தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், மாலைத்தீவு உள்ளிட்ட 12 நாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் இந்த குழு அறிக்கையை சமர்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்