9,770 வீரர்களை தூக்கி எறிந்த இலங்கை ராணுவம்..

x

இலங்கை ராணுவத்திலிருந்து, 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகளால், ராணுவத்திலிருந்து விலகிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், முன்னறிவிப்பு இன்றி சென்றவர்களுக்காக, கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல், மே 20ம் தேதி வரை பொது மன்னிப்பு காலமாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அதன்படி, ராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், இதுவரை 9 ஆயிரத்து, 770 பேர் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்