பள்ளி பேருந்தில் தீ விபத்து - 23 பேர் பலியான பயங்கரம்....

x

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் நிலையில், முதற்கட்டமாக 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்