``காதுல ரத்தமா வருது’’ நரகமான சவுதி.. தமிழக இளைஞர் அனுப்பிய வீடியோ.. கதறும் பெத்த மனசு

x

சவூதி அரேபியாவில் வேலைக்காக சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது மகனை மீட்டு தாயகம் அழைத்து வரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

பெருங்களூர் அருகே மட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் - மாரியாயி தம்பதியரின் மகன் வினோத், கடந்த ஏப்ரல் மாதம், ஒரு நிறுவனம் மூலம் சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டலில் பணியில் சேர்ந்துள்ளார். சில நாட்களிலேயே அங்கிருந்து சுமார் ஆயிரத்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டலுக்கு மாற்றப்பட்ட நிலையில், வினோத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு காதில் ரத்தம் வந்துள்ளது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், வினோத், வீடியோ பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்