நொடியில் 16 உயிர்களை காவு காங்கிய மும்பை கோரம் - மூலக்காரணமான அந்த ஒருவரை தூக்கிய போலீஸ்

x

மும்பையில் 120 அடி ராட்சத பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பேனர் கம்பெனியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் ஏற்பட்ட புழுதி புயலால், காட்கோபர் பகுதியில் இருந்த 120 அடி உயரம் கொண்ட ராட்சத இரும்பு பேனர் சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததை அடுத்து, பேனர் நிறுவனத்தின் உரிமையாளர் பவேஸ் பிண்டே தலைமறைவானார். அவரை மும்பை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து கைது செய்து, மும்பை அழைத்து வந்தனர். விதிகளை மீறி 120 அடி உயரத்திற்கு பேனர் வைத்ததாக கூறி அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்