லெபனானை உலகின் பெரிய சவக்கிடங்காக மாற்றிய இஸ்ரேல்.. நெஞ்சை சிதறடிக்கும் மரண ஓல கதறல் காட்சி

x

லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத குவியல்களை அழிப்பதாக திங்கள் கிழமை இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதலை தொடங்கியது. செவ்வாய் கிழமை 2 ஆவது நாளாக தாக்குதலை தொடர்ந்தது. இஸ்ரேல் தாக்குதலில் கட்டிடங்கள் சிதையும் காட்சிகளும், மக்கள் அச்சத்தில் பெய்ரூட்டை நோக்கி செல்லும் காட்சிகள் அங்கிருந்து வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 குழந்தைகள், 94 பெண்கள் உள்பட 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள் என லெபனான் தெரிவித்திருக்கிறது. 2 ஆயிரம் பேர் வரையில் காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களோடு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் வந்தவாறு உள்ளன. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் கதறி அழும் காட்சியும் அங்கிருந்து வெளியாகியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்