ஒரே ஒரு பழத்திற்காக வருடா வருடம் குற்றாலம் வரும் வெளிநாட்டு பெண்.. என்ன பழம் தெரியுமா?

x

குற்றாலத்தில் துரியன் பழங்களை சுவைப்பதற்காக, உஸ்பெகிஸ்தானில் இருந்து பெண் சுற்றுலா பயணி ஒருவர் வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், அங்கு, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே கிடைக்கும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஷா என்ற சுற்றுலாப் பயணி, குற்றாலம் வருகை தந்து துரியன் பழத்தை சுவைத்துள்ளார். பல்வேறு நாடுகளில் துரியன் பழங்களை தேடி அலைந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் குற்றாலத்தில் கிடைக்கும் என்பதை அறிந்து வந்த‌தாகவும், அதன்பின்னர் ஆண்டுதோறும் சீசனுக்கு வந்து துரியன் பழத்தை சுவைப்பதாகவும் கூறினார். ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது துரியன் பழத்தை ருசிக்க வேண்டும் என்றும் உஸ்பெகிஸ்தான் பயணி ஷா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்