அடிமடியிலே கை.. இஸ்ரேலுக்கு லெபனான் வைத்த குறி - எந்த நேரத்தில் என்னாகுமோ.. பதற்றத்தில் உலகம்

x

லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. 550-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் லெபனான் மக்கள் நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வடக்குப் பகுதியை நோக்கிச் செல்கிறார்கள். இந்த சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் இஸ்ரேல் வீசும் குண்டுகள் வெடித்து சிதறுகிறது. இதற்கு பதிலடியாக லெபனான் வீசும் ஏவுகணைகளை இஸ்ரேலின் அயன் டோம் தடுக்கும் வேளையில், டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா ராக்கெட் ஏவியிருக்கிறது. அதை வானிலேயே இடை மறுத்தி அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக லெபனானில் தெற்கு லெபனான், பக்கா பள்ளத்தாக்கு பதிகளில் தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்