ஆடல் பாடலுடன் ஜெருசலேத்தில் நடந்த திருமணம்.. - சில நொடிகள் ரத்த நிறமாக மாறிய வானம்..

x

ஈரானின் ஏவுகணைகள் தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்க, ஜெருசலேம் நகரத்தில் ஈரானிய ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியது. சொற்ப உறவினர்களுடன் ஜெருசலேமில் திரண்ட ஜோடி, திருமண சடங்கு, சம்பிரதாயங்களை செய்து கொண்டிருந்தது. அப்போது, ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தன. இதனையடுத்து, சிறிது நேரம் திருமண சடங்குகள் நிறுத்தப்பட்டன. பின்னர் தாக்குதல் ஓய்ந்த நிலையில் ஆடல் பாடலுடன் திருமண விழா களை கட்டியது. ஏவுகணை தாக்குதலின் போது, வானம் திடீரென சிவப்பு நிறமாக மாறியதாகவும், தாங்கள் மிகவும் அச்சமடைந்ததாகவும் பெண்ணின் தயாார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்