"எந்த நொடியிலும்..." இஸ்ரேல், ஈரான், லெபனானில் வசிக்கும் இந்தியர்களுக்கு பறந்த உத்தரவு

x

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மீட்பு விமானம் எதுவும் இயக்கப்படவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியவர், இஸ்ரேலில் 30 ஆயிரம் இந்தியர்கள் வசிப்பதாகவும், அவர்களுக்கான அறிவுறுத்தலை இந்திய தூதரகம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தற்போதைய சூழலில் மீட்பு விமானங்கள் இயக்கப்படவில்லை என்றவர், வணிகரீதியான விமான சேவை தொடர்கிறது, விரும்பும் இந்தியர்கள் வெளியேறலாம் எனவும் தெரிவித்தார். லெபனானில் சுமார் 3 ஆயிரம் இந்தியர்களும், ஈரானில் 5 ஆயிரம் இந்தியர்களும் இருப்பதாக குறிப்பிட்டவர், அங்கிருந்தும் இந்தியாவிற்கு விமான சேவை இயக்கப்படுவதால் வெளியேற விரும்பும் இந்தியர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்