போரில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. சொந்த ராணுவ வீரர்கள் மீதே இஸ்ரேல் தாக்குதல்.. கை கொட்டி சிரிக்கும் ஹமாஸ்

x

இஸ்ரேல் ராணுவம் தங்களது சொந்த படைகள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலின் ஒரே குறிக்கோள், பொதுமக்களை கொல்வதும், உள் கட்டமைப்பை சிதைப்பதுமே என குற்றம் சாட்டியுள்ளார். காசா ஸ்டிரிப் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே சண்டை நீடித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், கடந்த 3 நாட்களில் இஸ்ரேலின் 60 வாகனங்களை தங்களது படை அழித்துள்ளதாக கூறினார். தாக்குதலின் போது, இஸ்ரேலிய வீர‌ர்களை ஹமாஸ் வீர‌ர்கள் கைது செய்துள்ளதாக நினைத்து, தனது சொந்த படையினர் மீதே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் அபு ஒபைடா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்