அதிபர் மரண செய்தியை அறிவித்த ஈரான்... அடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

அதிபர் மரண செய்தியை அறிவித்த ஈரான்... அடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஈரான் அதிபர் இப்ரஹிம் ரைசி உயிரிழந்த‌தைத் தொடர்ந்து அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. 50 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்த வேண்டும் என்பது ஈரானின் சட்டமாக உள்ளது. அதன்படி, அதிபர் பதவிக்கான வேட்பாளர்கள் பதிவுக்கு மே 30 முதல் ஜூன் 3ஆம் தேதி வரை என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜூன் 12 தொடங்கி 27 வரை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்தகட்ட பணிகளை மூத்த தலைவர்கள், அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்