இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்..இந்தியா கையில் எடுத்த 'ஆபரேஷன் அஜய்' | Israel War | INDIA

x

இஸ்ரேலில் போர் சூழலுக்கு மத்தியில், அங்கு சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவசரகால நடவடிக்கையாக, "ஆபரேஷன் அஜய்" மூலம் இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அறிவுறுத்தலின்படி ஏற்கனவே பதிவு செய்துள்ள இந்தியர்களுடன் முதல் விமானம், டெல் அவிவ் நகரில் இருந்து இன்று மாலை புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு விமானத்தில் பதிவு செய்த இந்திய குடிமக்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்