அடுத்தடுத்து 3... இஸ்ரேல் விவகாரம்... சென்னையை வரை இழுத்து... பரபரப்பாக்கிய ஒற்றை நபர்...

x

சென்னையில், ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு ஆதரவாக பேனர் வைத்தது குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டை மீர்சாகிப்பேட்டை பகுதி பள்ளிவாசல் அருகே, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு இடங்களிலும், ஆயிரம் விளக்கு மசூதி அருகே ஒரு இடத்திலும் பேனர் வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இந்த 3 பேனர்களையும் சைதாபேட்டையைச் சேர்ந்த ஒருவர் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேனர்களும் அகற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாருடைய தூண்டுதலின் பேரில் பேனர் வைக்கப்பட்டது? என்பது குறித்தும், பேனர் வைத்தவரின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்