போர் நடுவே போராடும் பிஞ்சு குரல்கள் - முத்தம் கொடுத்த அனுப்பிய பெற்றோர்
காசாவில் அல்-ஷிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 பச்சிளம் குழந்தைகளில், 28 குழந்தைகள் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தாக்குதலால், அல்-ஷிபா மருத்துவமனையில், மின்சாரம், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், குறைபிரசவத்தில் பிறந்த 31 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், 31 பச்சிளம் குழந்தைகளில் 28 குழந்தைகள் வெளியேற்றப்பட்டு, எகிப்துக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 3 குழந்தைகள், தெற்கு காசாவில் உள்ள் எமராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் அனைவரும் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள, உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், அவர்களுக்கு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவை என கூறியுள்ளார்.