நினைத்துக்கூட பார்த்திருக்காது `காசா'.. தப்பிக்க சொல்லி அடிக்கும் `இஸ்ரேல்' - பொழியும் எமன் மழை..

x

போர் உக்கிரமாகியுள்ள சூழலில் காசா மக்களை எகிப்திற்கு தப்பி ஓடச் சொன்னது இஸ்ரேல்... எதன் வழியாக இஸ்ரேல் தப்பிக்க அறிவுறுத்தியதோ அதே இடத்தில் அதன் படைகள் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக வீடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

மக்கள் உயிரைக் கையில் பிடித்து கொண்டு ஒளியக் கூட இடமின்றி அங்கும் இங்கும் ஓடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன... ராஃபா வழியாக மட்டுமே பாலஸ்தீனியர்கள் எகிப்துக்குள் நுழைய முடியும்... ஆனால் அதன் அருகே 24 மணி நேரத்தில் 3 முறை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனர்களுக்கு காசாவில் பதுங்குக் குழிகள் கிடையாது... மக்கள் ஐநா பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் தங்க கட்டாயப் படுத்தப்படும் நிலையில் அவற்றின் மீதும் இஸ்ரேல் படைகள் குண்டு வீசி வருகின்றன... மக்கள் தஞ்சம் புக இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக காசா அழிக்கப்பட்டு வருவதாய் தெரிகிறது...


Next Story

மேலும் செய்திகள்