கொடூர `கல்லறை' கட்டிய வெறி - பிஞ்சு முகத்தில் 250 தையல்.. மண்ணுக்குள் மூன்று முக்கிய தலை - மேப்பில் இருந்தே காணாமல் போகும்.. உலகம் பாரா அழிவு

x

பிறந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட அவலம் தான் இது...

ஆசை ஆசையாய் பார்த்துப் பார்த்து கட்டிய வீடுகள் ஏவுகணைகளால் எரிந்து கரியாகிப் போனது தான் மிச்சம்...

எண்ணையும் எழுத்தையும் நன்னெறிக் கதைகளையும் சொல்லித் தந்த பள்ளிக்கூடங்கள் சின்னாபின்னமான கதையை எங்கு சென்று சொல்வது?...

இவை...வகுப்பறையா?...கல்லறையா?...

சிரித்துப் பேசி ஓடியாடி விளையாடித் திரிந்த குழந்தைகளின் கால்கள் ரத்தம் வழிய வழிய உயிரைக் காக்க நிற்காது ஓடிக் கொண்டிருக்கின்றன...

தாய்-தந்தையை இழந்த பிள்ளைகள்...பிள்ளைகளை இழந்த பெற்றோர்...

போரில் உறவுகளை இழக்காத குடும்பமே இல்லை என்றாகி விட்டது...

லட்சக்கணக்கான உயிர்களைக் காத்த மருத்துவமனைகளே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசர நிலை...

குண்டடி பட்ட ஒரு வயது குழந்தைக்கு முகத்தில் 200 தையல்கள்...பிஞ்சு முகம் தாங்குமா?...

கை, கால்கள், உறுப்புகளை இழந்த கைக்குழந்தைகள்...

கருவறையிலேயே கல்லறை கட்டப்பட்ட சிசுக்கள்...

தாலாட்டு கேட்க வேண்டிய காதுகள் மரண ஓலங்களையும், வெடிகுண்டு சத்தத்தையும் தான் கேட்கின்றன...


Next Story

மேலும் செய்திகள்