"எங்கமா போனீங்க என்ன காப்பாத்துமா... ஒரு நாயகன் உருவாகிறான்"

x

காலங்காத்தாலே சங்கீதம் சாதகம்னு உயிர வாங்குறானே... டேய் நீ ஊத்துற ஒரு கிளாஸ் பாலுக்கு இன்னு நா என்ன என்னடா பண்ணனும்... முடியலடா... 8 கட்டையில பாட வைக்குறனு என்ன பாடையில போக வச்சிடுவான் போலயே..... என்ன பெத்தவளே இந்த பைத்தியகார பயகிட்ட இருந்து காப்பாத்து...


ஆமைக்கும் முயலுக்கும் போட்டி வச்சா முயல்தான் ஜெயிக்கும்னு எந்த கூறுகெட்ட குக்குறுடா சொன்னது.... அதை எல்லாம் மாத்தி இந்த ஆமை பய புது வரலாறு படைச்சி இருக்கான்டா.... முயலு முட்டாலா இருந்தா ஆமை என்ன, ஆக்டோபஸ் கூட ஹன்ட்ரடு (100) மீட்டர் ல கோல்டு மெடல் அடிக்கும் போல...

யோவ் நைனா.... நா பாட்டுக்கு வீட்ல குடுக்குறத சாப்டு குப்புற படுத்து கொரட்ட விட்டு தூங்கிட்டு இருந்தேன்.... என்ன ஹோட்டலுக்கு கூப்டு வந்து இப்படி சாப்ட சொல்லி சாவடிக்குறீயே.... போயா யோவ்.....


Next Story

மேலும் செய்திகள்