நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா எனக்கூறிய விலங்கியல் பூங்கா... சீனா பூங்காவில் அரங்கேறிய பாண்டா நாடகம்...!

x

சீனாவில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகை விலங்கான பாண்டா கரடிகள் மீது பலருக்கு தனிப்பிரியம் உள்ளது. அதன் சுட்டித்தனத்தை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. இந்நிலையில், சீனாவில் உள்ள தைஜௌ விலங்கியல் பூங்காவில், மக்களை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்த பாண்டா கரடிகள் இல்லை. இதனால் போலியான பாண்டா கரடியை உருவாக்க முயற்சித்த பூங்கா நிர்வாகம், சௌ சௌ என்ற இனத்தை சேர்ந்த நாய்களுக்கு பெயிண்ட் அடித்து பாண்டாக்கள் போல் உலாவ விட்டிருக்கின்றனர். இதற்கு கட்டணமும் வசூலித்துள்ளனர். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி கேலிக்கு உண்டான நிலையில், நாய்க்கு டை அடித்த விவகாரத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்தியதாகவும், அதனை Panda Dogs என அறிமுகப்படுத்தியதாகவும் பூங்கா சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்