அச்சுறுத்தும் வானிலை - தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானம்

x

அந்தமானில் மோசமான வானிலை சூழல் காரணமாக, அங்கு திரையிறங்க முடியாத விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, 170 பயணிகளுடன் அந்தமானுக்கு விமானம் சென்றது. விமானம் அந்தமான் எல்லைக்குள் சென்ற போது, மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. இதனால், விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. இந்நிலையில், நாளை காலை அதே விமானத்தில் பயணிகள் அந்தமான் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்