கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் கைது

x

கனடாவில் பொதுவெளியில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கனடாவில் உள்ள நியூ ப்ரன்ஸ்விக் மாகாணத்தில் நீர் பூங்கா உள்ளது. அங்கு வந்த சிறுமிகள் உட்பட பெண்கள் சிலரை இந்திய இளைஞர் கட்டிப்பிடித்ததுடன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்த இளைஞரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். வரும் அக்டோபர் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்