பிரிட்டன் தேர்தல் களத்தில் 8 தமிழர்கள் - பிரதமர் அரியணை யாருக்கு?
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வம்சாவளியினர் 8 பேர் களமிறங்கியுள்ளனர்...பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 326 இடங்களில் வெற்றி பெறும் கட்சியின் தலைவர் பிரதமராவார்... இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் நேரடி மோதல் நிலவும் நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்... உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய தமிழர்கள் களத்தில் உள்ளனர். 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சி தலைமையிலான ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
Next Story